**இந்த மருத்துவரைப் பற்றி நான் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவது, அவர் செய்யாத ஒரு குற்றத்திற்காக. அன்று பலர் இந்தக் கைதை ஆதரித்தனர். ஆனால், இதயம் நடுங்கிய சிலரில் நானும் இருந்தேன்.**
என் இதயத்தை மிகவும் உலுக்கியது, இந்தக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் மூத்த மகள், அப்போது நான் பணியாற்றிய மாலியதேவி பெண்கள் பாடசாலையின் மாணவியாக, திக்கற்ற நிலையில் இருந்ததுதான். நான் அதைப் பற்றி என் நாட்குறிப்பில் எழுதியுள்ளேன். ஷெய்னப் ஷாஃபி. 9ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். தன் தந்தை செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டபோது, அவள் மாலியதேவி பாடசாலையை நிரந்தரமாக விட்டுச் சென்ற விதம், என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது. அதன் பிறகு அவள் வாழ்ந்தது மிகவும் வேதனையான வாழ்க்கையாக இருந்தது. ஆனால் அந்தத் தடைகள் அனைத்தையும் மீறி, அவள் கல்வியில் வெற்றி பெற்றாள். சாதாரண தரம் (O/L) தேர்வில் 9A பெற்று தேர்ச்சி அடைந்தாள். அவள் வெற்றி பெற்றதை சமூக ஊடகங்களில் பார்த்தபோது, நான் மகிழ்ச்சியால் நிரம்பினேன்
நான் அப்பாவை விட நல்ல மருத்துவராக வருவேன். அப்பாவை அவமதித்த அனைவருக்கும் சிகிச்சை அளிப்பேன்.
சாதாரண தரம் (O/L) முடிவுகளுக்குப் பிறகு அவள் உறுதியாகச் சொன்னது இதுதான். இன்று மீண்டும் அவளது குரல் என் செவிகளில் ஒலித்தது, உயர்தரப் பரீட்சை (A/L) முடிவுகளுடன்.
சார், நான் ஷெய்னப். சாருக்கு முடிவுகளைச் சொல்ல தகவல் தெரிவிக்க வந்தேன். மாவட்ட தரவரிசையில் 12வது இடம். மருத்துவம் படிக்க முடியும்.
மகளே, நீ ஒரு தைரியமான பெண். உன்னையும் உன் குடும்பத்தையும் சமூகத்தில் தனிமைப்படுத்தி வெறுப்பை விதைத்த சமூகத்திற்கு, நீ உன் இலக்கை அடைந்து பதிலடி கொடுத்திருக்கிறாய். இந்த நோயாளி சமூகத்தைக் குணப்படுத்த, உனக்கு ஞானமும் வீரியமும் கிடைக்கட்டும்..
சிங்கள முகநூல் பக்கம்ஒன்றிலிருந்து பெற்று மொழிபெயர்கப்பட்டது.
0 comments :
Post a Comment