புரவலர் ஹாஷிம் உமர் பங்குகொண்ட ரமழான் விருது வழங்கலும் பரிசளிப்பு விழாவும்!



நீர்கொழும்பு பலகத்துறை அல்ஹிமா மகளிர் நலன்புரி அமைப்பும் அல் பலாஹ் அஹதிய்யா பாடசாலையும் இணைந்து நடாத்திய புனித ரமழான் விருது வழங்கலும் பரிசளிப்பு விழாவும் நீர்கொழும்பு பலகத்துறை Maple Leaf Hotel வரவேற்பு மண்டபத்தில் அஹதிய்யாவின் தலைவர் நஸ்ரியா நஸ்மி தலைமையில் நேற்று முன்தினம் (27) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசில்களையும், விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மௌலவி தாஹிர், விசேட அதிதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் முஹம்மட் மஹ்தூம் மொஹம்மட் மேர்சிலங்கா நிறுவன பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.முனாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் ஹனீபா, சமூக ஜோதி ரபீக், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :