தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!



"தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்" என்ற கருப்பொருளின் கீழ் நாட்டின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடுமுழுவது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய தினம், 2025.02.04 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம், முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட பீடாதிபதி அஷ்செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், மற்றும் மாணவர்கள் நலன்புரி சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கான், பல்கலைக்கழக வேலைப்பகுதியின் பொறியலாளர் எம்.எஸ்.எம்.பஸில், பிரதம பாதுகாப்பு அதிகாரி ஏ.எம்.ஜாபிர், சட்டம் மற்றும் ஆவணங்கள் பிரிவின் சிரேஷ்ட உதவி பதிவாளர் ஏ.ஆர்.எம். சுல்பி, விரிவுரையாளர்கள், நிர்வாக மற்றும் கல்விசார ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்போது மரநடுகையும் இடம்பெற்ற அதேவேளை பல்கலைக்கழக பாதுகாப்பு தரப்பினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.
















 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :