திருகோணமலை மாவட்ட அஹதியா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வொன்று கிண்ணியாவில் சனிக்கிழமை (6) இடம் பெற்றது.
முஸ்லிம் கலாசாரத் தினைக்களத்தின் ஏற்பாட்டில் கிண்ணியா பிரதேச செயலகத்திலும், அகில இலங்கை மத்திய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூரியிலும் நடை பெற்றது.
இச் செயலமர்வில் 200 அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அஷ்ஷெய்ஹ்களான எம்.றபாய்தீன்,பிஸ்தாமி மற்றும் ஏ.எம்.ஹிதாயதுல்லா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அஷ்ஷெய்ஹ்களான எம்.வை. .ஹதியதுல்லா,ஏ.எம்.ஹிதாயத்துல்லா , ஏ.எஸ்.அப்துல் அஸீஸ் மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் சான்றிதழ்களை இதன் போது வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment