எமக்கிடையே தொடரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக USAIDஇன் உதவியுடன், நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களமானது, அண்மையில் 94 முக்கிய TNSWS செயற்திட்ட பங்குதாரர்களுக்கான ஒரு செயலமர்வினை நடத்தியது. இந்த ஊடாடும் செயலமர்வானது ஒற்றைச் சாளர அமைப்பு செயற்படும் விதம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய பங்கேற்பாளர்களின் புரிதலை அதிகப்படுத்தியது. இலங்கையின் TNSWS இனை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைப்பு மற்றும் நிலைபேறான தன்மையை ஆகிய விடயங்களையும் இந்த செயலமர்வு ஊக்குவித்தது.
“ஒரு நீண்ட கால பங்காளராகவும், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் விளங்கும் அமெரிக்காவானது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வணிகங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவி செய்கிறது. வணிக சவால்களை எளிதாக்கி, வர்த்தகத்தை அதிக வெளிப்படைத் தன்மையுடைதாகவும், எதிர்வு கூறகூடியதாகவும் மாற்றக்கூடிய TNSWS போன்ற முன்முயற்சிகளுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவ் கூறினார்.
“முன்னெப்போதுமில்லாத ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருகையில், ஒரு வர்த்தக தேசிய ஒற்றை சாளர முறைமையினை தாபிப்பது மிகவும் அவசியமானதாகும். அது எமது வர்த்தக போட்டித்தன்மையை அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வளர்ச்சியயடைவதற்கும் உதவி செய்து, ஒரு நிலைபேறான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இட்டுச்செல்லும்.” என நிதியமைச்சின் செயலாளர் திரு.கே.எம்.மகிந்த சிறிவர்த்தன வலியுறுத்தினார்
2017 ஆம் ஆண்டில் இலங்கை கைச்சாத்திட்ட உலக வர்த்தக அமைப்பின் Trade Facilitation Agreement இன் ஒரு பகுதியாக, ஒரு TNSWS இனை அமுல்படுத்துவது அவசியமாகும். ஒரு TNSWS இனை அமுல்படுத்துவதற்கு 2022 இல் அமைச்சரவை அங்கீகாரமளித்தது.
கடந்த வருடத்தில், TNSWS செயற்திட்டத்தை முன்னின்று வழிநடத்துவதற்காக ஒரு செயற்திட்ட அமுலாக்கப் பிரிவை நிறுவுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா இலங்கை அரசிற்கு வழங்கியது.
0 comments :
Post a Comment