வாயால் கூறுவதால் பயனில்லை. அனர்த்த நிவாரணம் அதிகரிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள். -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச



னர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், இதற்கான சட்ட அதிகாரங்களை வழங்கும் சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மாத்திரம் அறிவிக்காமல், புதிய சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலாளர்களுக்கு சட்டரீதியாக அறிவிப்பை விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் வாய்மொழியாக அறிவுரைகளை வழங்குவது போதுமானதாக அமையாது. அதிகரிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றறிக்கை மூலமே செயல்படுத்துகின்றனர். எனவே இந்த சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :