சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 10 ஆவது ஆண்டு நிகழ்வு!



ர்ஹும் கலைச் சுடர் சக்காப்மெளலானா ஞாபகார்த்தமாக மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 10 ஆவது ஆண்டு நிகழ்வு 2024.06.08 சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மண்டப அரங்கில் இடம்பெற்றது.

சட்டத்தரணி என் ஏ.எம் அசாம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷீக் மற்றும் முன்னாள் பிரதேச செயலாளர் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு ஆணையாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம் சலீம் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.

மாவட்ட பொறியியளாலர் ஏ.எம் சாஹிர்,மெளலவி கலாபூஷணம் முபாறக் அப்துல் மஜீட் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம் றின்ஸான் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி கலாசார உத்தியோகத்தர் யு.கே.எம் றிம்சான் மெளலவி எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதி மற்றும் மன்றத்தின் உறுப்பினர்கள் ஆலோசகர்கள் ஒய்வு நிலை அதிபர் எம்.எம் இஸ்மாயில் ஆகியோர் அதிதிகள் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

பிறை FM ஒளிபரப்பாளர் ஏ.ஆர்.எம் நௌபீல் முஹம்மதியா கலைமன்ற தலைவர்எம்.ஐ. அலாவுதீன் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.

இன்நிகழ்வில் மர்ஹும் கலைச் சுடர் சக்காப் மெலானா ஞாபகார்த்த விருது வழங்களில் சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) அவர்களும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி கலாசார உத்தியோகத்தர் யு. கே. எம் றிம்ஸான் JP அவர்களும் கொளரவிக்கப்பட்டார்கள். மன்றத்தின் முக்கியஸ்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.












































எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :