நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் மாபெரும் இரத்ததான முகாம்



பாறுக் ஷிஹான்-
ற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் பூர்வாங்க சேவையாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் தலைவர் அப்துல்லாஹ் முகமட் சாஜித் தலைமையில் நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலய ஆரம்ப பிரிவில் நேற்று இடம்பெற்றது.

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்பதற்கமைவாக நற்பிட்டிமுனையில் சில வருடங்களாக இயங்கிவரும் நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பானது திடீர் விபத்துக்கள்,சத்திர சிகிச்சைகளுக்கான அவரச தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

காலை முதல் மாலை வரை அமைப்பின் செயலாளர் அமானுல்லாஹ் முகமட் சாகீர் நெறிப்படுத்தலில் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவ அதிகாரி வைத்தியர் கிருஸ்ணமூர்த்தி வித்தியா ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள்,சமூக அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :