தற்போது நிலவும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவுரை



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது சம்பந்தமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு,உடல் சோர்வு ,பக்கவாதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதுடன், நான்கு வயதிற்கும் குறைவான குழந்தைகள் , 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ,அதிக உடல் எடை கொண்டவர்கள் ,நோய் வாய்ப்பட்டவர்கள் அதிகம் இதனால் பாதிக்கப்படக்கூடும்.

உடல் வெப்பநிலை 103 பரனைட்டுக்கு மேல் காணப்படும் , அதிக தலைவலி ,குமட்டல் ,தலை சுற்றல் மயக்கம் ,உடல் சோர்வு ,தசைப் பிடிப்பு ,மனக் குழப்பம் ,தோல் வறண்டு போவதுடன் சிவப்பு நிறமாதல் , 9. இதய படபடப்பு ,மூச்சு வாங்குதல் மற்றும் ,சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல், மூச்சு திணறல் என்பன இதன் அறிகுறிகளாக காணப்படும்.

இதனால் கூடியவரை சூரிய ஒளி நேராக படுவதை முடியுமானவரை தவிர்க்க வேண்டும் ,பாடசாலை மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் செல்வதை தவிர்த்தல் வேண்டும் ,மேலும் உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை முடிந்தவரை காலை மாலை வேலைகளில் ஈடுபட உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,மதிய வேளையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்று முழுதாக தவிர்த்தல் வேண்டும்
தண்டனை வழங்கும் பொருட்டு மாணவர்களை வெளியில் நிறுத்துவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்,பாடசாலையில் வெளியே நடைபெற வேண்டிய வைபவங்களை காலை வேளையில் 7:30 மணியுடன் முடித்துக் கொள்ளல் ,வெப்பம் அதிகமாக உள்ள மதிய வேளைகளில் திறந்த வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்த்தல், வாகனத்தினுள் குழந்தைகளை தனியாக பூட்டி விட்டு செல்வதை தவிர்த்தல் இது சில வேளைகளில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தவிர்ந்து கொள்ள அடிக்கடி போதிய அளவு நீர் அருந்த வேண்டும் , செயற்கை குளிர் பானங்களை தவிர்த்து இயற்கையான பானங்களை நீர் இளநீர் போன்றவற்றை உட்கொள்ளுதல் ,உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அதிகளவான பானங்களை வழமையாக உட்கொள்வதை விட அதிகமாக உட்கொள்ள வேண்டும் ,மதுபானம் ,சீனி செறிவாகாத உள்ள செயற்கை குளிர்பானங்களை தவிர்த்தல் ,எப்பொழுதும் நீர் போத்தல் ஒன்றை தன் வசம் வைத்திருத்தல்
குழந்தைகளை வீட்டிற்குள் அல்லது மர நிழலில் விளையாட அனுமதிக்கலாம் வெளியில் செல்லும்போது தொப்பிகளை அணிந்து செல்வதற்கு ஊக்கப்படுத்தவும்,பொதுமக்கள் வெளியில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக வெள்ளை மஞ்சள் மற்றும் இள நிறங்கள் உடைய பொருத்தமான உடைகள் தொப்பி போன்றவற்றை அணிய வேண்டும் ,
முடிந்தவரை காற்றோட்டமான அல்லது குளிர்ச்சியான இடங்களில் தரித்திருத்தல்,உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக அடிக்கடி மேல் கழுவுதல் மேலும் தளர்வான காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிதல் ,திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போதிய அளவு நீர் அருந்த வேண்டும் மேலும் முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்க வேண்டும் வெப்பமான கால நிலைக்கு ஏற்ற பழங்களான தர்பூசணி ,வெள்ளரிப்பழம் ,தோடை என்பன சிறந்தவை இவற்றை துண்டுகளாக அல்லது பானங்களாக உட்கொள்ளலாம் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொது மக்கள் நலன் கருதி அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :