காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயிலும் மிகவும் வசதி குறைந்த மாணவர்கள் தமது குடும்ப பொருளாதார கஸ்ட நிலை காரணமாக தமது வாழ் நாளில் வசதி படைத்த மாணவர்கள் அனுபவிப்பது போன்று கல்விச் சுற்றலா மேற்கொண்டு யாழ்ப்பாண பிரதேசத்திற்கு அப்பாலுள்ள நுவரேலியா போன்ற குளிரான பிரதேசத்திற்கு சென்று இயற்கை காட்சிகளை காணக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் அண்மையில் முடிவு கிடைத்தது.
இக் கல்லூரியில் கற்ற லண்டன் பழைய மாணவர்கள் இம் மாணவர்களின் ஏக்கத்தை நிறைவு செய்யும் வகைகள் மலையக சுற்றுலாவிற்கான முழுச் செலவையும் வழங்கியிருந்தனர்.
இந்த வாய்ப்பை வழங்கிய லண்டன் பழைய மாணவர்களுக்கு சுற்றுலா சேன்ற மாணவர்களின் பெற்றோர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment