மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட அன்றாட உணவிற்கு அல்லல்பட்டு தனிமையில் வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமுறிகண்டி, கனகராயன்குளம், ஓமந்தை, ஒலுமடு, வன்னிவிளாங்கும், மாங்குளம், ஒட்டுசுட்டான், கிழவன்குளம், பனிக்கன்குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 முதியோர்களுக்கு தலா ரூபா 3000 பெறுமதியில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தார்மீக சேவைக்காக லண்டன் மாநகரின் ஓம்சரவணபவ சேவா அறக்கட்டளை அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment