மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை காணவில்லை,தகப்பன் பொலிஸில் முறைப்பாடு



ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியில் உள்ள மசூட் அஸ்மட் வயது(15) எனும் மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் அநுராதபுர ஈமானியா அறபுக் கல்லூரியில் கற்கும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 16.5 2024 ந் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் அறபு மத்ரசாவில் இருந்து 10.05.2024 அன்று ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்த நிலையில் 16.05.2024 அன்று காணாமல் போயுள்ளதாகவும் 18.05.2024 ந் திகதி அன்று தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் மொறவெவ பொலிஸில் காணாமல் போன மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :