கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்ப திரை நீக்க விழா



பாறுக் ஷிஹான்-
ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்ப திரை நீக்க விழா சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையில் கடந்த புதன்கிழமை(15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ஆகிய டாக்டர் இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்த வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்பத்தின் நிர்மாணத்திற்கான அனுசரனையை கல்முனை சரவணாஸ் ஜுவலறி உரிமையாளர் க.பிரகலதன் வழங்கி இருந்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :