மட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சட்ட விரோத பதிவாளர் அலுவலகமொன்று விஷேட அதிரடிப்படையினரால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டதில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 205 தரிசுக் காணிக்கான உறுதிப் பத்திரங்கள், 58 வெற்று உறுதிப் பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வமாக கையொப்பத்துடன் கூடிய 30 பத்திரங்கள், 12 தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக விஷேட அதிரடிப்படையினர் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment