சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு பிரச்சினைக்குத் தீர்வாக முன்னெடுக்கப்படும் கரையோர கல் அணை அமைக்கும் பணியின் இரண்டாம் கட்டப் பணிகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தவிசாளருமான கௌரவ. ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் (17) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆஷிக், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ஜி.எம்.அஸ்மி, கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் கரையோரம் மூலவள திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.துளசிதாசன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜுனைத் வஃஷீர், பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது இணைப்பாளர் முஹம்மத் சபான், சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட நிருவாக அதிகாரி முஹம்மத் நளீர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் நுஸ்ரத் அலி உட்பட பிரதேச மீனவர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment