சாய்ந்தமருதில் கரையோர கல் அணை அமைக்கும் பணியை ஆரம்பித்து வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்.






எம்.எம்.றம்ஸீன்-
சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு பிரச்சினைக்குத் தீர்வாக முன்னெடுக்கப்படும் கரையோர கல் அணை அமைக்கும் பணியின் இரண்டாம் கட்டப் பணிகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தவிசாளருமான கௌரவ. ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் (17) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆஷிக், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ஜி.எம்.அஸ்மி, கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் கரையோரம் மூலவள திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.துளசிதாசன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜுனைத் வஃஷீர், பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது இணைப்பாளர் முஹம்மத் சபான், சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட நிருவாக அதிகாரி முஹம்மத் நளீர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் நுஸ்ரத் அலி உட்பட பிரதேச மீனவர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :