விவசாயத்தை தமது ஜீவனோ பாயத் தொழிலாக முன்னெடுத்துவரும் மக்களின் விவசாயச் செய்கையினை ஊக்கிவித்து உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேசச் செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் சுமார் 1600 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் மாந்தை மேற்குப் பிரதேசச் செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 437 பயனாளிகளுக்கு விதைப்புக்கான பயறு விதைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
"ஒரு ஏக்கருக்குட்பட்ட விளைநிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 1340/- விகிதம் 10 கிலோ பயறு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment