கரப்பந்து,கபடி போட்டிகளில் கல்முனை றியலியன்ஸ் விளையாட்டு கழகம் சாம்பியன்...!



எம்.என்.எம்.அப்ராஸ்-
பிரதேசமட்ட கரப்பந்து மற்றும் கபடி போட்டிகளில் கல்முனை றியலியன்ஸ் விளையாட்டு கழகம் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

கல்முனை பிரதேச கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுகளில் ஒன்றான கரப்பந்து,கபடி இறுதி சுற்றுப் போட்டிகள் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற போது சம்பியனாக றியலியன்ஸ் விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டது.

இரண்டாம் இடத்தை பிரில்லியன் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது. கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்ற குறித்த போட்டித் தொடரை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஆர்.றப்ஸான் அஹமட் நடாத்தினார்.

போட்டிக்கு அதிதிகளாக அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் அவர்களும் உதவி அதிபர் ஏ.ஆர்.எம்.முஷாஜித் அவர்களும் பிரில்லியன் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.டி.எம்.பஸ்வாக் அவர்களும் போட்டி நடுவர்களாக எம்.ஏ.எம்.றியால், ஏ.டப்ளியு.ஆஷாட்கான் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :