சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டில் நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு (06) காத்தான்குடி சம்மேளனத்தின் ஷேகுல் பலாஹ் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் பொதுச்செயலாளர் இப்றான்ஸா பவ்றுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.நெளஷாத் மொஹிதீன் ஊடகத்தின் முக்கியத்துவம் , தனிமனித வாழ்வில் ஊடகங்களின் வகிபாகங்கள், நாட்டின் ஜனநாயகத்திற்கு ஊடகத்தின் பங்களிப்பு போன்ற தலைப்புக்களில் மாணவர்களுக்கு விரிவுரை வழங்கினார்.
இந் நிகழ்வில் நூற்றுக்கு அதிகமான பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியதோடு அவர்களுக்கு சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.எம்.எம். பாயிஸ் மற்றும் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment