பாரதி தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை!



அபு அலா-
தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் கிழக்கு மாகாண திருக்கோணமலை மாவட்ட பாரதி தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
தேசிய மட்ட வரலாற்று சாதனையை நிலைநாட்டிய தரம் 8 யைச் சேர்ந்த த.பிளசியா இரண்டாம் இடத்தையும், தரம் 7 யைச் சேர்ந்த சீ.அஸ்வினி ஆறாம் இடத்தையும் பெற்றுக்கொடுத்து பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமையை சேர்த்துக் கொடுத்ததுடன் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டி வரலாற்றுத்தடத்தினையும் பதிவு செய்த மாணவிகளாக இடம்பிடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களை வழிப்படுத்திய அதிபர் சுஜந்தினி யுவராஜா மற்றும் ஆசிரியர்களான அ.அலெக்சாண்டர், திருமதி பா.ரோஷினி ஆகியோர்களுக்கு பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற இப்போட்டியில் குறித்த இரு மாணவிகளும் இச்சாதனையை படைத்துள்ளமையும், அதன் பெறுபேறுகள் இம்மாதம் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :