நளீர் பவுண்டேசனின் முயச்சியால் மெகா பாலர் பாடசாலை புதுப்பொலிவு பெற்றது!



கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் நளீர் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், சமூக சிந்தனையாளருமான எம்.ஏ.நளீர் அவர்களின் அயராத முயச்சியின் காரணமாகவும் அவுஸ்த்ரேலியாவில் உள்ள அவரது நண்பர் ஒருவர் ஊடாக சுமார் 7 இலட்சம் ரூபாய்கள் செலவிட்டு காடு மண்டியிட்திருந்த மெகா பாலர் பாடசாலை புதுப்பொலிவுடன் மாணவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஏ.எஸ். பிர்தௌசியா அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன் அவர்கள் கலந்துகொண்ட அதேவேளை தொழிலதிபர் எம்.ஏ.நளீர் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ராஜீவ்காந் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். சர்மில ராஜ் அவர்களும் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ரிப்க்கான் அவர்களும் சபூரியா பள்ளிவாசல் தலைவர் ஏ.பி. சுபைதீன் அவர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். றியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :