இலங்கை இந்திய ஊடகவியலாளர்களின் நலன் தொடர்பிலான சந்திப்பு!



அபு அலா-
சிலோன் மீடியா போரத்தின் தேசிய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் உள்ளிட்ட குழுவினருக்கும், இந்திய ஊடகவியலாளர் சாகுல் ஹமீட் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு (20) வெள்ளவத்தை கிரீன் பலஸில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கை, இந்திய ஊடகவியலாளர்களுக்கிடையில் ஒரு நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் இரு நாட்டுக்குமான ஊடக சுற்றுப் பயணமொன்றை ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்து கொடுப்பதன் மூலம், இரு நாட்டு ஊடகவியலாளர்களின் உறவு இன்னும் வலுப்பெறும் என்று சிலோன் மீடியா போரத்தின் தேசிய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் எடுத்துரைத்தார்.

மேலும், சிலோன் மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தியை முன்னிட்டு, இந்திய, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர்களை கௌரவிப்பது பற்றியும், இரு நாட்டு ஊடகவியலாளர்களின்
நலன் கருதிய பல விடயங்கள் பற்றி மிக விரிவாக கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில், சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :