மக்களின் பிரச்சினைகளை கண்டறிய முஷாரப் எம்.பி. அட்டாளைச்சேனைக்கு விஜயம்



எம்.எம்.றம்ஸீன்-
க்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிவர்த்திப்பதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் அட்டாளைச்சேனைக்கு வருகை தந்து சிறப்பித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்களினால் அழைத்து வரப்பட்டதுடன் இதுவரை காலமும் அபிவிருத்தி செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வரும் பாதைகளையும் அவருக்கு நேரில் காண்பித்ததுடன் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான மகஜர் ஒன்றினையும் பொது மக்களினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், மேலதிக நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் இங்கு உரையாற்றும் போது கருத்துத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :