கடல் அலையில் அள்ளுன்டு மீனவர் பலி! களுவங்கேணியில் சம்பவம்!




ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
றாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி ஏத்துக்கால் கடல்பகுதியில் புதிய மீன் பிடி படகொன்றை வெள்ளோட்டம் பார்க்க , படகினை கடலுக்குள் செலுத்தும்போது பின்னால் ஏறிய மீனவர், பாரிய காற்றினால் படகு திசைமாறிச்செல்ல சந்தர்ப்பம் காணப்பட சடுதியாக படகிலிருந்து கடலுக்குள் பாய்ந்து படகினை நேர்த்திசைக்கு கொண்டுவர முயற்சிக்கையில், அவ்வேளை ஏற்பட்ட சுளி கொண்ட கடல் அலையினால் இவர் இழுத்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

களுவங்கேணி -2,சிங்காரத்தோப்பை சேர்ந்த பாலசுந்தரம் ஜெஸ்குமார் (34) என்ற இளைஞனே பரிதாபமாக மரணத்தை தழுவியவராவார்.

மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுவரப்பட்ட பின்னர், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, திடீர் மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலாசாரை பணித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :