ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி ஏத்துக்கால் கடல்பகுதியில் புதிய மீன் பிடி படகொன்றை வெள்ளோட்டம் பார்க்க , படகினை கடலுக்குள் செலுத்தும்போது பின்னால் ஏறிய மீனவர், பாரிய காற்றினால் படகு திசைமாறிச்செல்ல சந்தர்ப்பம் காணப்பட சடுதியாக படகிலிருந்து கடலுக்குள் பாய்ந்து படகினை நேர்த்திசைக்கு கொண்டுவர முயற்சிக்கையில், அவ்வேளை ஏற்பட்ட சுளி கொண்ட கடல் அலையினால் இவர் இழுத்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
களுவங்கேணி -2,சிங்காரத்தோப்பை சேர்ந்த பாலசுந்தரம் ஜெஸ்குமார் (34) என்ற இளைஞனே பரிதாபமாக மரணத்தை தழுவியவராவார்.
மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுவரப்பட்ட பின்னர், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, திடீர் மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலாசாரை பணித்தார்.
0 comments :
Post a Comment