ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சுததந்திர தின நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்ட நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம் பெற்ற தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பல்லாண்டு மூலிகை கன்றுகளை நடுதல் திட்டத்தில் சுவதரணி மூலிகை பயிர் வாரத்தை முன்னிட்டு பயிர்கன்றுகள் வினியோகிக்கப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அத்துடன் விஷேட தேவையுடைய ஒருவருக்கு சமுக சேவை திணைக்களத்தினால் சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :