உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை பாடசாலைகளுக்கு சூட்டத் தடை.! உதவி வழங்கும் போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலை சென்று அரசியல் பேசவும் தடை.!



ஏ.எம்.ஆஷிப்-
யிருடன் இருக்கும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பணித்துள்ளார்.

இனிமேல் உயிருடன் இருக்கும் யாருடைய பெயரையும் பாடசாலைகள் மற்றும் கட்டிடங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களையும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே இவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தனி நபர்களின் பெயர்களை அரச பொதுக் கட்டிடங்கள், பாடசாலைகள், வீதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட எந்தவொரு அரச சொத்துக்களுக்கும் சூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேச்சுக்களை நடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :