நிர்க்கதியான பெண்ணுக்கு வாழ்வாதார உதவி



வி.ரி.சகாதேவராஜா-
போதிய வருமானமின்றி மூன்று பெண் பிள்ளைகளுடன் நிர்க்கதியான பெண்ணுக்கு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு வாழ்வாதார உதவியை வழங்கி வைத்தது.

கணவனின் வருமானம் இன்றி மூன்று பெண் பிள்ளைகளை வளர்த்து படிப்பிற்பதற்காக பாரியளவில் தோட்டம் செய்வதையும் அதற்கு கிணற்றில் இருந்து கைகளால் நீர் இறைப்பதையும் அவதானித்த அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி திருமதி கலைவாணி தயாபரன் அவதானித்து இவ் உதவியை மேற்கொண்டார்

தோட்டத்தினை மேலும் அபிருத்தி செய்து வருமானத்தை ஈட்டுவதற்காக 28000.00 பெறுமதியான நீர் பம்பி வழங்கி வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு பெண்ணுக்கு இவ் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் அதனை பெண்கள் வலையமைப்பின் தலைவி திருமதி கலைவாணி தயாபரன் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :