கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வித்தியாரம்ப விழா-2024



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் 2024ம் கல்வி ஆண்டுக்கான புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான ஏடு தொடக்க விழா இன்று பாடசாலை பகுதி தலைவர் டி.கே .எம். மௌஸீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம் றிசாத் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை சபா கோல்ட் ஹவுஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஃப். எம். சகி, "டே நைட் "பென்சி ஹவுஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ. எம். சிறாஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தரம் இரண்டு மாணவர்களினால் புதிய மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளால் புதிய மாணவர்களுக்கும் கிரீடம் அணிவித்தும், இனிப்பு பொதிகளும் வழங்கி, ஏடு தொடக்கி வைத்துக் கௌரவிக்கப்பட்டனர். மேலும் வருகை தந்த கௌரவ அதிதிகளினால் புதிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பாடசாலையின் பிரதியதிபர் எம்.ரீ.ஏ. மனாப், பாடசாலையின் பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :