தென் கிழக்கு பல்கலைக்கழக 16 வது பட்டமளிப்பு விழா!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று பல்கலைகழக பிரதான சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

பெப்ரவரி 10ஆம் தேதி 3 அமர்வுகளும் 11ஆம் தேதி 3 அமர்வுகளுமாக மொத்தமாக ஆறு அமர்வுகளாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டம் பெற உள்ளனர்.

இரண்டாம் நாளில் இடம்பெறவுள்ள நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பட்டதாரிகளும் ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடத்தை சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 350 பேரும் ஆறாவது அமர்வில் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேரும் பட்டங்கள் பெறவுள்ளனர்.

இதனடிப்படையில் மொத்தமாக 1441 உள்வாரி பட்டதாரிகளுக்கும் 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகளுக்கு இந்த பட்டமளிப்பு விழாவின் போது பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

அத்துடன் குறித்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையிலும் இடம்பெற்றவுள்ளது.

பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதிகளாக United States-Sri Lanka Fulbright Commission தலைவர் கலாநிதி பேட்ரிக் மெக்னமாறா அவர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித்தலைவரும் சிரேஷ்ட பேராசியருமான சந்தன உடவத்த அவர்களும் கலந்துகொண்டு பட்டமளிப்பு உரையினை ஆற்றவிருக்கின்றனர்.

பட்டமளிப்பு நிகழ்வின்போது தொழிநுட்ப பீடத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியரான பியசிறி அவர்களுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக ஊடக பிரிவின் நெறிப்படுத்தலில் எதிர்வரும் பட்டமளிப்பு நிகழ்வு வரலாற்றில் முதல்தடவையாக பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக நேரடியாக ஒலி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடக்க அம்சமாகும். இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட இணையத்தள பக்கமும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஊடக நிழ்வில் உபேவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் இணைந்து பட்டமளிப்விழாக் குழு தலைவர் பேராசிரியர் எம்.பி.எம் இஸ்மாயில், பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், ஊடக பிரிவு இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஊடக பிரிவு
தென்கிழக்கு பல்கலைக்கழகம்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :