மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் 'வாழ்வும் பணியும்' நினைவேந்தல் நிகழ்வு!



அபு அலா -
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் 'வாழ்வும் பணியும்' நினைவேந்தல் நிகழ்வு (27) கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் வை.எல்.எஸ்.ஹமீட் எனும் ஆளுமை பற்றிய விஷேட நினைவுரையாற்றினர்.

மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன், பிரதித் தலைவர் எம்.எஸ்.அனீஸ், பிரதித் தவிசாளர் எம்.ஐ.முத்து முஹம்மட், பிரதி செயலாளர் நாயகம் எம்.ஏ.அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், வை.எல்.எஸ். ஹமீடின் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் ஆதவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வை.எல்.எஸ்.ஹமீடின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :