"அயலவர்களுக்கு உதவுவோம்" நிவாரணப்பணி : மாளிகைக்காடு, கல்முனை, அட்டாளைச்சேனையில் இன்று வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பல குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த குடும்பங்களுக்கு "அயலவர்களுக்கு உதவுவோம் ஐந்தாம் கட்டம்" திட்டத்தின் கீழ் அரிசி பொதிகள் கிழக்கின் கேடயத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் மாளிகைக்காடு, கல்முனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் இன்று (03) வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ் அவர்களின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள், தொழில் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற குடும்பங்கள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த கொரோனா தொற்று காலத்திலும் ஜனாஸா நல்லடக்கம், நிவாரணப்பணி, என பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்த கிழக்கின் கேடயம் அமைப்பு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கான உலருணவு பொதிகளை கொரோனா தொற்று காலத்திலும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிழக்கின் கேடயத்தின் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், கிழக்கின் கேடயத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர் மௌலவி சபா முஹம்மட் (நஜாஹி) மற்றும் கிழக்கின் கேடயம் தொண்டர்களால் இன்று மாளிகைக்காடு, கல்முனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்கான அரிசிப் பொதிகளை அடையாளம் காணப்பட்டவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :