பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தால் கட்டி முடிக்கப்பட்ட அவசர சேவைப் பிரிவு உத்தியோகபூர்வமாக கையளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தினால் 20 மில்லியன் ரூபா பெறுமதியான அவசர சேவை பிரிவு கட்டிடத் தொகுதி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு பாவனைக்காக கையளித்ததுடன் சீன செயற்றிட்டத்தின் மூலம் நடைபெறும் கட்டுமான பணிகளையும் குறித்த குழுவினர் பார்வையிட்டனர்

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம் மாஹிர் அவர்களும் பிரிவுத்தலைவர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கார்த்திகேயன் அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியாக வளாகத்தினுள்மரங்களும் நட்டு வைக்கப்பட்டன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :