வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதியின் பிள்ளைக்கு மட்டக்களப்பு சிறைச்சாலையினால் தையல் இயந்திரம் அன்பளிப்பு



எம்.ஏ.ஏ.அக்தார்-
னிதப் படுகொலை தொடர்பாக மரண தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதியின் பிள்ளைக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கத்தினால் தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது

குறித்த மரண தண்டனை கைதி தனது பிள்ளைக்கு வாழ்வாதார உதவி வழங்கும் படி சிறைச்சாலை திணைக்களத்தினூடாக விடுத்த வேண்டுகோளை அடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் தமது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தையல் இயந்திரத்தை குறித்த சிறுமியிடம் கையளித்தனர்

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் எஸ். ராஜா தலைமையில் நடைபெற்ற தையல் இயந்திரம் கையளிப்பு வைபவபத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதியும் சிறைச்சாலை நலன்புறு சங்க உறுப்பினருமான வைத்திய கலாநிதி கே.கருணாகரன் உட்பட சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அட்டாளைச்சைனைச் சேர்ந்த மேற்படி மரண தண்டனை கைதி மனித படுகொலை சம்பந்தமாக மரண தண்டனை வழங்கப்பட்டு தற்போது வெளிக்கடை சிலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :