சின்னம்மை தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கல்முனை பிராந்தியத்தில் வெற்றிகரமாக முன்னெடுப்பு



நூருல் ஹுதா உமர்-
சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் சின்னம்மை (சின்னமுத்து) தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு 6 முதல் 9 மாத வயதுடைய குழந்தைகளுக்கு மேலதிகமான சின்னமுத்து தடுப்பூசி ஒன்றை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வேலைத்திட்டம் சனிக்கிழமை முதல் கல்முனை பிராந்தியத்திலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹிலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸாலின் மேற்பார்வையின் கீழ் இத்தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக 68 தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது. இதுவரை மொத்தமாக 1562 பேருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தினம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :