கிண்ணியா பிரதேசத்தில் சர்வ மத பிரார்த்தனை





எம்.ஏ.முகமட்-
புதிய வருட ( 2024) பிறப்பை முன்னிட்டு இலங்கை திருநாட்டுக்கும், நாட்டு மக்களின் எழிச்சி ,சமாதானம், சௌபாக்கியம் வேண்டி கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜும்ஆப் பள்ளியில் துஆ பிரார்த்தனையும், ஆலங்கேணி சித்தி வினாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடும் சிறப்பாக (3) நடைபெற்றது.

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய கிண்ணியா பிரதேச செயலக பிரதேச கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமான எம்.எச்.முகம்மது கனி,நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.ஆர்.நிஜாம்தீன்,கலாசார அதிகார சபையின் ஒருங்கிணைப்பாளரும் கலாசார உத்தியோகத்தருமான ஜே.எம்.ஹில்மி மற்றும் கலாசார உத்தியோகத்தர் கே.அன்பழகன்,பிரதேச கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள்,பள்ளிவாசல் இமாம், அதன் நிர்வாகிகள் , கோவில் பூசாரி,அதன் நிர்வாகிகள், கிண்ணியா பள்ளிவாசல் சம்மேளன நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :