செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு




செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் அட்டாளைச்சேனை 8 மற்றும் 6ஆம் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நேற்று (30) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பின் காரியாலயத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.அஸ்ரத், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உப தலைவர் எம்.எச்.றம்சான், பொருளாளர் ஏ.எல்.றிம்ஸான், அமைப்பாளர் ஏ.எல்.றியாஸ், ஊடக இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், உறுப்பினர் ஏ.எல்.எம்.புஹாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்தனர்.

இதன்போது வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் என 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஆலோசகர்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் உறவுகள் மற்றும் நண்பர்கள் பலரின் உதவியுடன் குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த உலர் உணவுப் பொருட்களை வெற்றிகரமாக வழங்குவதற்கு நிதி மற்றும் பொருட்கள் என பல வழிகளிலும் உதவிபுரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
செக்டோ - ஸ்ரீலங்கா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :