சாய்ந்தமருதில் சமாதான நீதவான்கள் ஒன்றியம்!



நாட்டில் கௌரவ பதவிகளில் ஒன்றான சமாதான நீதவான்களாக திகழும் கனவான்களை உள்ளடக்கிய சமாதான நீதவான்கள் ஒன்றியம் சாய்ந்தமருதில் உதயமாகியது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பிரதேச செயாலாளரும் தற்போதைய தேர்தல்கள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் வளவாளராக எம்.ஐ.எம். சதாத் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.

சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் 2024.01.06 ஆம் திகதி இடம்பெற்ற ஒன்றுகூடல் ஒன்றின்போதே குறித்த ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இங்கு சமாதான நீதவான்களின் பொறுப்புகள் அந்த பதவியின் கௌரவ தன்மைகள் அதன் வரலாறுகள் தொடர்பில் வெகுவாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

ஒன்றியத்தின் தலைவராக பொறியலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும் செயலாளராக எம்.எம். உதுமாலெப்பை அவர்களும் பொருளாளராக யூ.கே. காலித்தீன் அவர்களும் உப தலைவராக எம்.எம். இஸ்மாயில் அவர்களும் உப செயலாளராக எம்.பி. நௌசாத் அவர்களும் காப்பாளராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களும் ஆலோசகர்களாக ஏ.எம்.இப்றாகிம் அவர்களும் எம்.ஐ.ஏ. ஜப்பார் ஆகியோரும் தெரிவாகினர்.

இங்கு சாய்ந்தமருதில் உள்ள சமாதான நீதவான்களை ஒன்றிணைப்பது தொடர்பிலும் அவர்களது கடமைகள் தொடர்பில் தொடராக ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :