கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் 50 வது பணிப்பாளர் சபைக் கூட்டம்




எம்.ஏ.ஏ.அக்தார்-
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் 50வது பணிப்பாளர் சபைக் கூட்டம் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தில் அண்மையில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண திட்டமிடலுக்கான பிரதிப் பிரதம செயலாளர்,கிழக்கு மாகாண நிதிக்கான பிரதிப் பிரதமர் செயலாளர்,கிழக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்,வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வீடமைப்பு அதிகார சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல முக்கிய தீர்மானங்களும் எட்டடப்பட்டன.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் சேவைகளை ஜனரஞ்சகப்படுத்தி மிகப்பெரிய வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றி அமைப்பதற்கான பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஏக மனதாக பணிப்பாளர் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :