அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றல் ஆரம்பித்தல் நிகழ்வு



க.கிஷாந்தன்-
2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் பொறுபேற்றல் முதல் நாள் நிகழ்வானது அரசாங்க சுற்று நிருவத்தின் அமைவாக இன்று 2024.01.01 திகதி 09.00 மணியளவில் சகல அரச நிறுவனங்களிலும் ஆரம்பமானது.

அந்த வகையில் அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 2024 ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பித்தல் பொறுப்பேற்றல் நிகழ்வானது அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா ருவணி கமகே அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (01) காலை இடம்பெற்றது.

இவ் நிகழ்வானது சமய அனுஷ்ட்டானங்களுடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து தேசிய கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், உறுதிமொழி எடுத்தல், இராணுவம் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் அவர்களை உற்சாகம் ஊட்டும் முகமாக தலைமை உரையும் பிரதேச செயலாளரினால் நிகழ்த்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :