பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோஸ்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் களணி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை.


எம்.எம்.ஜெஸ்மின்-

ளனி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோஸ்தர் ஒருவர் ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த போது ,கடத்திச் செல்லப்பட்டு, தடுத்து வைத்து தாக்கப்பட்டு ,நுழைவாயிலில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு கல்வி சாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலும் சமரசத்தை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் கடந்த நான்காம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் அறிவித்திருந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :