சீனடி பயிற்சி செயலமர்வு!



எம்.ஏ.முகமட்-
ற்காப்பு கலையான சீனடி பயிற்சி செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (2) நடை பெற்றது.

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தொலஸ் மகே பஹன எனும்12 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இச் செயலமர்வை கிண்ணியா கலாசார அதிகார சபை ஒழுங்கு செய்திருந்தது.

இச் செயலமர்வில் வளவாளர்களாக எம்.எம்.ராபி,ஏ.பஸீகு இல்ஹாம்,ஏ.ஏ.கபூர்,ஏ.கே.பஸீர், ஆகியோர் தற்காப்பு சீனடி கலைகள் பற்றி இங்கு விரிவுரையாற்றினர். மகமாறு ,சம்மாவஜதீவு , காக்காமுனை மற்றும் பெரியாற்றுமுனை சீனடி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்களை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி,திருமலை மாவட்ட செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் மற்றும் கலாசார அதிகார சபை ஆலோசகர் எம்.ஏ.அக்பர் சலீம்,கவாசார அதிகார சபை உப செயலாளர் எம்.ஏ.முகமட் மற்றும் வளவாளர்கள் ஆகியோரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
இச் செயலமர்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி,பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம். ஹல்மி,கலாசார அதிகார சபை ஆலோசகர் எம்.ஏ.அக்பர் சலீம்,கலாசார அதிகார சபை உப செயலாளர் எம்.ஏ.முகமட்,திருகோணமலை மாவட்ட செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :