நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி தம் வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்க காத்திருக்கும் மாணவர்களுக்கு துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளையும் சிரேஷ்ட மாணவர்களின் அனுபவப்பகிர்வுகளையும் உள்ளடக்கிய செயலமர்வு அக்கரைப்பற்று இளமானி பட்டப் பயிலுனர் சங்கம் மற்றும் ஐகோனிக் யூத் (Iconic youths) அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெளிவாக இருக்கின்ற ஏராளமான மாணவர்கள் இதில் பங்கு பற்றி பயன் பெற்றனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகங்கள் பற்றிய அறிமுகம், பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்புகள், நேர முகாமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பான பல்வேறு காத்திரமான விடையங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக
சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எப்.எச்.இஸட். சிப்லி அஹமட், எம்.அப்துல் றஸாக் மற்றும் செல்வி.எம்.ஐ.பாத்திமா நிஹ்லா
ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment