நாபீர் பௌண்டேஷன் ஏற்பாட்டில் சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக விஷேட துஆ பிரார்த்தனை



எம்.என்.எம்.அப்ராஸ்-
சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் 19வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்,நாபீர் பொண்டேஷனின் சம்மாந்துறை தலைமை காரியாலயத்தில் (26) இன்று இடம்பெற்றது.

பிரபல சமூக சேவையாளரும்,தொழிலதிபரும், நாபீர் பொண்டேஷன் ஸ்தாபகரும்,பொறியியலாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் வழிகாட்டலில்,சுனாமி அனர்த்தத்தினால் மரணித்த உறவுகளுக்கான கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு கண்ணியத்துக்குரிய உலமாக்களினால் நடத்தப்பட்டது.

துஆ பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவுகளை - கல்முனை தாருஸ்ஸபா அமையத்தின் ஸ்தாபகத் தலைவர் மெளலவி அல்ஹாஜ் சபா முஹம்மது நஜாஹி முகத்தமுல் காதிரி அவர்கள் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வினை‌‌ இ.சி.எம்.(ECM) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீட் தலைமை தாங்கி நடத்தியதோடு நாபீர் பௌண்டேஷன் உறுப்பினர்கள்,இ.சி.எம்(ECM)நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வை தொகுபினை அறிவிப்பாளர் எஸ்.டி ரோஷன் அஷ்ரப் அவர்களும் நன்றியுரையினை அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம் வழங்கினர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :