வெலிப்பன்ன பிரதேசத்தில் கஞ்சா கலந்த போதை மாத்திரையுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள கடைகளை திடீர் சோதனைக் குட்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் கல்மத்த பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றை மையப்படுத்தி அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள கோழியிறைச்சி விற்பனை நிலையத்தை சோதனையிட்ட போது கஞ்சாக் கலந்த 230 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவராகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :