ஏறாவூர் நகரசபைக்கு கணக்கீட்டு முகாமைத்துவத்திற்கான சிறப்பு விருது



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை பொதுநிதி கணக்காளர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கணக்கீட்டு முகாமைத்துவத்தை சிறப்பாக அறிக்கையிடுதல் சம்பந்தமான போட்டியில் ஏறாவூர் நகரசபைக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்,மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் நீல் அசோக்க ரஞ்சித் அவர்களிடமிருந்து ஏறாவூர் நகரசபையின் சார்பாக சிறப்பு விருதினை அதன் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம்.ஹமீம், கணக்காளர் புஸ்ரா நுஸைர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :