மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கே.கனகேஸ்வரன் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோக அவர்களினால் நியமனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கே.கனகேஸ்வரன் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் செயலாளரினால் நிமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக்கடிதம் கையளிக்கும் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,இராஜாங்க அமைச்சருமான கௌரவ காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.

1998 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டுவரை கொடிகாமம் போகட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகவும், 2003 முதல் 2004 வரை நிர்வாக சேவை பயிற்சியிலும், 2004 தொடக்கம் 2015 வரை தொழில் திணைக்கள பிரதி தொழில் ஆணையாளராகவும், 2015 தொடக்கம் 2019 வரை மருதங்கேணி பிரதேச செயலாளராகவும் , 2019 ஆகஸ்ட் முதல் 2019 டிசம்பர் வரை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், 2019 டிசம்பர் முதல் 2023 வரை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், 2023 நவம்பர் வரை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :