கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் பரிசளிப்பு வைபவமும்.


நூருல் ஹுதா உமர்-
ல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இவ்வருட மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்விப்பணிப்பாளர் பீ. ஜிகானா ஆலிப் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்வி பணிப்பாளர் ச.சரவணமுத்து அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மருதமுனை உலமா சபை தலைவருமான எப்.எம். அஹமட் அன்சார் மௌலானா நளீமி அவர்களும், சிறப்பு அதிதிகளாக இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் யூ.எல்.றிபாயுடீன் ஆகியோருடன் முன்னாள் அதிபர்கள், கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை மற்றும் பழைய மாணவர் அமைப்பின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :