சவளக்கடை06ம் கிராமம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கும் ரஹ்மத் மன்சூருக்கும் இடையிலான சந்திப்பு.


எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச்செயலாளரும்,ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான றகுமத் மன்சூர் அவர்களுக்கும் அம்பாரை மாவட்டம் சவளக்கடை 06ம் கிராமம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ரஹ்மத் மன்சூரின் கல்முனை அலுவலகத்தில் நேற்று இரவு (08)புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தேவைகள் மற்றும் சவளக்கடை 06ம் கிராமத்தின் கல்வி நிலை அதன் செயற்பாடுகளையும் ரஹ்மத் மன்சூர் கேட்டறிந்து கொண்டதுடன்,ஜனாஸா நலன்புரி சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார்.

ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் ஏ.எம்.சீறாஸ், ஜனாஸா நலன்புரி சங்க செயலாளர் ஏ.எம்.அஸ்மீர், சவளக்கடை 6ம் கிராமம் பிலால் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளரும்,ஜனாஸா நலன்புரி சங்க ஸ்தாபக தலைவருமான வை.பாரிஸ், 6ம்கிராமம் பிலால் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பொருளாளர் எஸ்.ஐ.எம்.
முபீன்,ஜனாஸா நலன்புரி சங்க ஆலோசகர் எம்.ஐ.
யுனைதீன்,ஜனாஸா நலன்புரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொன்டனர்.

இச்சந்திப்பின் போது முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச்
செயலாளரும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் சவளக்கடை 6ம் கிராமத்திற்கு தனிப்பட்ட முறையில் பள்ளிவாசல் மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்ட சேவைகளை நினைவு கூர்ந்து பிரதேச மக்கள் சார்பாக ஜனாஸா நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :