ஈலியா காடின் மற்றும் சக்ஸஷ் முன்பள்ளி ஆகியன இணைந்து பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்தும் செயற் திட்டம்.


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

லியா காடின் மற்றும் சக்ஸஷ் முன்பள்ளி ஆகியன இணைந்து செயற்படுத்தும் பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்தும் செயற் திட்டமான இஸ்பெக் (SPEG) விரிவாக்கமாக புலமைத்துவ கலந்துரையாடல் ஒன்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழ பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாரூன், உயிரியல் விஞ்ஞான துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.றியாஸ் அஹமட், பேராசிரியர் யூ.எல்.ஜெய்னுதீன், பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி ஆகியோர் கலந்துகொண்டு பசுமையாக்கல் செயற்பாடு, பாராம்பரிய விவசாய ஊக்குவிப்பு, முன்பள்ளியில் தோட்ட பாடவிதானத்தை அறிமுகம் செய்வதற்கான அறிவுரைகளை பகிர்ந்துகொண்டனர்.

‘நிலையான பாரம்பரிய விவசாய மதிப்புச் சங்கிலி’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உயிரியல் விஞ்ஞான துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.றியாஸ் அஹமட் அவர்களினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மீள்கட்டமைத்தலும் எனும் தலைப்பில் பிராதன உரையை வழங்கியதுடன் கள அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இக்கலந்துரையாடலில் செரன்டிப் ஓர்கானிக் கோல்டிங் பிரைவெட் லிமிடட் பணிப்பாளரும் ஸ்பெக் திட்ட ஆலோசகருமான ஏ.ஆர். பர்சான், சக்ஸஷ் முன்பள்ளி நிறுவுனர் ஏ.என்.எம்.றிழா, முன்பள்ளி முகாமையாளர் ஜே.அஸ்வர், முன்பள்ளி அதிபர் என்.ஜே.நஸ்மிலா, நிகழ்வு முகாமையாளர் ஸபா எம். றபீக் ஆசிரியைகளான எம்.பி. பிர்தௌசியா, பீ.டிலக்சிகா, எம்.எப்.றிப்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஸ்பெக் திட்டத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஜி. அஹமட் ஹனீஸ் அவர்கள் சார்பாக திட்ட இணைப்பாளர் என்.ஜே. நஸ்மிலா அவர்களால் பிரதான அறிவுப் பகிர்வினை வழங்கிய உயிரியல் விஞ்ஞான துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.றியாஸ் அஹமட் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஈலியா காடின் மற்றும் சக்ஸஷ் முன்பள்ளி ஆகியன இணைந்து செயற்படுத்தும் பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்தும் செயற் திட்டமான இஸ்பெக் (SPEG) விரிவாக்கமாக புலமைத்துவ கலந்துரையாடல் ஒன்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழ பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாரூன், உயிரியல் விஞ்ஞான துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.றியாஸ் அஹமட், பேராசிரியர் யூ.எல்.ஜெய்னுதீன், பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி ஆகியோர் கலந்துகொண்டு பசுமையாக்கல் செயற்பாடு, பாராம்பரிய விவசாய ஊக்குவிப்பு, முன்பள்ளியில் தோட்ட பாடவிதானத்தை அறிமுகம் செய்வதற்கான அறிவுரைகளை பகிர்ந்துகொண்டனர்.

‘நிலையான பாரம்பரிய விவசாய மதிப்புச் சங்கிலி’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உயிரியல் விஞ்ஞான துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.றியாஸ் அஹமட் அவர்களினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மீள்கட்டமைத்தலும் எனும் தலைப்பில் பிராதன உரையை வழங்கியதுடன் கள அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இக்கலந்துரையாடலில் செரன்டிப் ஓர்கானிக் கோல்டிங் பிரைவெட் லிமிடட் பணிப்பாளரும் ஸ்பெக் திட்ட ஆலோசகருமான ஏ.ஆர். பர்சான், சக்ஸஷ் முன்பள்ளி நிறுவுனர் ஏ.என்.எம்.றிழா, முன்பள்ளி முகாமையாளர் ஜே.அஸ்வர், முன்பள்ளி அதிபர் என்.ஜே.நஸ்மிலா, நிகழ்வு முகாமையாளர் ஸபா எம். றபீக் ஆசிரியைகளான எம்.பி. பிர்தௌசியா, பீ.டிலக்சிகா, எம்.எப்.றிப்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஸ்பெக் திட்டத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஜி. அஹமட் ஹனீஸ் அவர்கள் சார்பாக திட்ட இணைப்பாளர் என்.ஜே. நஸ்மிலா அவர்களால் பிரதான அறிவுப் பகிர்வினை வழங்கிய உயிரியல் விஞ்ஞான துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.றியாஸ் அஹமட் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :