அட்டன் செனன் கே.எம். பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்


க.கிஷாந்தன்-
லையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அட்டன் செனன் கே.எம். பிரிவில் 4 வீடுகள் சேமதமாகியுள்ளது.

இதனையடுத்து, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் பணிப்புரைக்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் அவர்களுக்கு உடனடியாக நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.

பிரதி தலைவர் கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ராஜரத்தினம், யோகேஸ்வரி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், பிரத்தியேக உதவியாளர் தயாளன் ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட இடத்துக்கு உடன் விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
மேலும், ஹட்டன் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபன உத்தியோகத்தர்களுக்கு தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி துரித கதியில் குடியிருப்புகளை சீர்செய்து எதிர்காலத்தில் நீர் குடியிருப்புகளுக்கு உட்செல்லாதவாறு தடுப்புகளையும், வடிகாலமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :