சாய்ந்தமருது சீ பிரீஸின் 20 ஆம் ஆண்டு நிறைவில்; அசத்தல் நிகழ்வுகள்!



சாய்ந்தமருது சீ பிரீஸ் உணவகம் கடந்த 2004.07.26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (2023.07.28) புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் சாய்ந்தமருது சீ பிரீஸ் முன்பாக பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

சீ பிரீஸ் உணவகத்தின் உரிமையாளர் எம்.வை.எம். ஜௌபர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

2010ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 20 ரூபாய்க்கு புரியாணி என்ற கோஷத்துடன் நிகழ்வுகள் களைகட்டியிருந்தது. சீ பிரீஸின் நாலா பக்கங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த நிகழ்வில், தயிர் சட்டி புகழ் கே.எல்.நஜாத்தின் வார்த்தை ஜாலங்கள் சபையோரை கலகலப்பாய் வைத்திருந்தது. பிராந்தியத்தின் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களான ஏ.ஆர்.எம். நௌபீல், ஜனூஸ் சம்சுதீன், எஸ்.ரீ. ரோஷன் அஸ்ரப், எம்.பி.எம். றிம்சான், றம்சானா சமில் போன்றோர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர்.

பாடல், பொதுமக்களின் கருத்துக்கள் என கலகலப்பாக சென்ற நிகழ்வின் இடையிடையே பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் வாக்களிக்கப்பட்டவாறு 20 ரூபாய்க்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கி வைக்கப்பட்டன.








































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :